செய்திகள் மலேசியா
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தாமான் மலூரி தீ புரோன் போய்ஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
செபூத்தே தொகுதி கெஅடிலான் தலைவர், கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தார்.
செனட்டர் இராசையா, செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன், நகைச்சுவை நடிகர் சத்யா உட்பட கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள கெஅடிலான் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
டத்தோ அஸ்மான், ஓம்ஸ் தியாகராஜன், பண்டார் துன் ரசாக் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜோனதன் வேலா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி விருந்து நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு செய்து வரும் உதவிகள் குறித்து டத்தோ அஸ்மான் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
தமிழ் பள்ளிகள், கோவில்கள், இந்திய தொழில் முனைவர்கள், மாணவர்கள் உட்பட பல திட்டங்கள் மூலம் இந்திய சமுதாயத்திற்கு மடானி அரசாங்கம் உதவிகளை செய்து வருகிறது என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 9:53 am
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்
November 18, 2025, 9:37 am
