செய்திகள் மலேசியா
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
கோலாலம்பூர்:
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 134,916 நபர்கள் போதைப்பொருள், சட்டவிரோத போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது
இதில் பெரும்பாலானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில், 97,329 நபர்கள் அதாவது 72.15 சதவீதம் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில், குறிப்பாக இளைஞர்களிடையே, தடுப்பு, அமலாக்கம், மீட்பு திட்டத்தின் கீழ் பல முயற்சிகள் உள்ளன.
குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை குறிவைத்து பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்
November 18, 2025, 9:37 am
