செய்திகள் மலேசியா
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்
கோலாலம்பூர்:
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க
போலிசார் தவறி விட்டனர்.
வழக்கறிஞர் ஆர். ரேணுகா ராமையா இதனை தெரிவித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட நான்கு வயது சிறுமி தனது தந்தையுடன் துபாயில் வசித்து வருவதற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும் போலிசாரின் நடவடிக்கை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பராமரிப்பு தகராறில் மையமாக இருந்த நான்கு வயது கிருஷ்ணா கண்ணன், செப்டம்பர் 2023 இல் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோர் வருகையின் போது அழைத்துச் செல்லப்பட்டார்.
குழந்தையை மீட்க அவரது தாயார் வி. தேவித்ரா, உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.
மேலும் மீட்பு உத்தரவு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்படும் என்று போலிசார் உறுதிப்படுத்தியதாக ரேணுகா ராமையா தெரிவித்தார்.
இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தந்தையின் இறுதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், குழந்தை துபாயில் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
இருந்தபோதிலும், போலிசார் இன்டர்போல் அறிவிப்பை வெளியிடவில்லை
அந்த அறிவிப்பு இல்லாமல், வெளிநாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்த தாமதம் ஒரு தாயின் துன்பத்தை நீடிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:37 am
