செய்திகள் மலேசியா
மலேசிய பாதுகாப்பு படையில் முதல் ட்ரோன் பயிற்சியாளர் குழுவை உருவாக்கிய ஸ்ரீ கணேசுக்கு கௌரவ பதவி
கோலாலம்பூர்:
மலேசிய மாஹிர் அறக்கட்டளையின் தலைவர் டத்தோ பி. ஸ்ரீ கணேசுக்கு, மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையினால் பட்டமளிக்கப்பட்ட கௌரவ லெப்டினன்ட் கர்னல் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு படையின் திறனை மேம்படுத்திய அவரது பங்களிப்புக்கு அங்கீகார வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரின் தலைமையில் பாங்கி அல்ஃபா பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர ட்ரோன் பயிற்சியின் மூலம் மலேசிய பாதுகாப்பு படையில் முதல் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டனர்.
இரவு மீட்புப் பணிகளிலும், வெள்ளப்பாதிப்பு போன்ற அவசரநிலைகளிலும் வேகமான தகவல் பரிமாற்றம், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த ட்ரோன் பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
மேலும், வாயு கசிவு போன்ற ஆபத்தான சூழலில் ட்ரோன் மூலம் நிலை மதிப்பீடு செய்து, மீட்புக்குழுவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
இதனிடையே தனது தலைமையில் செயல்படும் மாஹிர் அறக்கட்டளையும், மலேசிய பாதுகாப்பு படையையும் இணைந்து நடத்திய பொதுத்–தனியார் கூட்டாண்மையினால், மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் வழி தான் பெற்ற இந்த சாதனை, மலேசிய பாதுகாப்பு அமைப்பை நவீன தொழில்நுட்ப திசையில் முன்னேற்றும் வரலாற்றுச் செயல் எனப் பாராட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 4:27 pm
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
January 11, 2026, 4:24 pm
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 11:12 am
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:28 am
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
January 11, 2026, 10:20 am
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
