செய்திகள் மலேசியா
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
கோலாலம்பூர்:
புதுடில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற துயரத்தால் துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதச் செயலாக உறுதிப்படுத்தப்பட்டால், அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
அப்பாவி மக்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் எந்த நியாயமும் இல்லை என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுக்கள், அதிகாரிகளுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் தனது நன்றியைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 4:23 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது: ஃபட்லினா சிடேக் உறுதி
December 9, 2025, 11:15 am
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு
December 9, 2025, 10:47 am
போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
December 8, 2025, 8:02 pm
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
December 8, 2025, 7:59 pm
