நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

கிள்ளான்:

பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இதனை கூறினார்.

கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு பலமுறை சுடப்பட்ட பின்னர் ஒருவர் இறந்ததை போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11.13 மணியளவில் பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்டவர் சுமார் 34 வயதுடைய உள்ளூர்வாசி, வேலையில்லாதவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர் காரின் முன்பக்கத்தில் பல முறை சுட்டார்.

மேலும் புகார்தாரரின் உடலின் முன்பக்கத்தில் தாக்கினார்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset