செய்திகள் மலேசியா
பூலாவ் கேரி ஸ்ரீ மகா மணியம்மன் துர்கையம்மன் ஆலயத்தை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு பாராட்டுகள்: டத்தோ சிவக்குமார்
கோல லங்காட்:
பூலாவ் கேரி ஸ்ரீ மகா மணியம்மன் துர்கையம்மன் ஆலயத்தை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
பூலாவ் கேரி ஸ்ரீ மகா மணியம்மன் துர்கையம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
கேரித் தீவில் பழைய தேயிலைப் பிரட்டு தோட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஆலயத் தலைவர் ராகவன், நிர்வாகத்தின் அன்பான அழைப்பைத் தொடர்ந்து இவ்விழாவில் மஹிமாவின் தலைவரும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ என். சிவக்குமார் கலந்து கொண்டார்.
இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வு தெய்வீக சக்தி, பக்தியால் நிரம்பியது.
இது ஆலயத்துக்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறித்தது.
இந்த புனிதமான கொண்டாட்டத்தைக் காணவும், எல்லாம் வல்லவரின் ஆசீர்வாதங்களைப் பெறவும் பலர் கூடியிருந்தனர்.
இந்த புனிதமான கும்பாபிஷேகம் அனைவருக்கும் நீடித்த அமைதி, செழிப்பு, நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும்.
அதே வேளையில் இவ்வாலயம் மஹிமாவில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினராக இணைந்துள்ளது.
அதற்கான சான்றிதழும் ஆலயத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் 3,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்வாலயத்திற்கு மின்சார இணைப்பு இல்லை. முழுக்க முழுக்க ஜெனரேட்டர் மூலம் இவ்வாலயம் செயல்படுகிறது.
இப்படி எத்தனை சவால்கள் இருந்தாலும் ஆலயத்தை பல தலைமுறைகளாக பாதுகாத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகள் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2025, 3:35 pm
எம்ஏ 63 விவகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம்; போரால் அல்ல: பிரதமர்
November 9, 2025, 3:31 pm
சபாவில் ரீபோர்மாசி என்ற முழக்கத்துடன் டத்தோஸ்ரீ ரமணனுக்கு உற்சாக வரவேற்பு
November 9, 2025, 11:43 am
நாட்டை சர்ச்சைகளின் தாயகமாகவும், அதிகார போதையின் இடமாகவும் மாற்றாதீர்கள்: பேரா சுல்தான்
November 9, 2025, 11:31 am
பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
November 9, 2025, 11:12 am
சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியது; ஒருவர் மரணம், 90க்கும் மேற்பட்டோர் காணவில்லை: போலிஸ்
November 9, 2025, 11:04 am
நீடித்த தகராறுகள் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன: பிரதமர் அன்வார்
November 9, 2025, 10:40 am
சபாவிற்கான 40% வருவாய் உரிமைகள்; முடிவு மதிப்பாய்வில் உள்ளது: ஃபஹ்மி
November 9, 2025, 1:08 am
சபா கூட்டுறவுக் கழகங்கள், தொழில்முனைவோரை வலுப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஆதரிக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 9, 2025, 1:07 am
