நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்

ஈப்போ:

பேரா மாநில போலிஸ் துறையில் சேவையாற்றக் கூடிய இந்திய போலீஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து நேற்று மாலை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினர்.

கோலகங்சார் மாவட்ட துணை போலீஸ் தலைவராக சேவையாற்றி வரும் சூப்ரிடெண்டன் சராலாதன் துரைசாமி நிகழ்வின் தலைவராக பொறுப்பேற்று சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில போலிஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின், மாநில போலிஸ் துணைத் தலைவர் முகமத் அஸ்லின் சிறப்பு வருகை புரிந்தனர்.

நிகழ்வை மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் குத்து விளக்கை ஏற்றி் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அதில் பேசிய அவர்,  துன்பங்களில் இருந்து விடுபட்டதை மையமாக வைத்து நம்பிக்கையைடன் இந்த தீபத் திருநாளை  மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகினறனர்.

இந்த மகிழ்ச்சி என்றென்றும் அனைவரின் உள்ளங்களிலும் நிலை நிறுத்த இங்கு அனைவரும் எப்பொழுதும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போலீஸ் துறையில் பல இனத்தவர்கள் பணி புரிந்து வருகிறார்.

அந்த ஒற்றுமை சேவையாற்றி வருகிறார்கள் அந்த ஒற்றுமை தொடர்ந்து நிலைநாட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னதாக பேசிய நிகழ்வு ஏற்பாட்டுக் குழுதர தலைவர் சூப்ரிடெண்டன் saralathan , மாநில போலீஸ் துறையில் அதிகமான இந்தியர்கள் சேவையாற்றி வருகிறா்கள்.

அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளதைக் காணும் போது மகிழ்சியாக உள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset