செய்திகள் மலேசியா
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
செர்டாங்:
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஃபாரித் அகமது கூறினார்.
செர்டாங்கின் பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள ஒரு கடையின் படிக்கட்டுகளில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார்.
வெட்டுக் காயங்களுக்கு இலக்கானதால் அவ்வாடவர் மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் உதவ ஆறு இந்திய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டவரின் வீட்டுத் தோழர்கள் ஆவர்.
இதில் முக்கிய சந்தேக நபர், ஒரு இந்திய நாட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாங்கள் அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களையும் சரிபார்த்து வருகிறோம், விசாரணைக்கு உதவக்கூடிய காட்சிகள் உள்ளன என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக புகார்தாரர் உட்பட நான்கு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கொல்லப்பட்ட நபர் சுமார் 19 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்ததாகவும் சுயமாக எலக்ட்ரீஷியனாக தொழில் செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
சபா தேர்தலில் கெஅடிலான் கட்சியின் பிரச்சாரங்கள் திறம்பட மேற்கொள்ளப்படும்: டாக்டர் சத்யா பிரகாஷ்
November 7, 2025, 12:29 pm
பிரஸ்மா புதிய தலைவர் டத்தோ மொஹ்சினுக்கு பாராட்டு விழா
November 7, 2025, 11:19 am
