செய்திகள் மலேசியா
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை: அந்தோனி லோக்
கோலாலம்பூர் -
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை.
போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
அதிக சுமை வரம்பு விதிமுறைகளில் திருப்தி அடையாத எந்தவொரு சங்கம் அல்லது கட்டுமான நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் இருக்காது. சாலை பயனர்களின் உயிர்கள் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
ஆக அரசாங்கம் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க விரும்புகிறது என்று அந்தோனி லோக் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தைகளை அழைப்பதற்குப் பதிலாக, சங்கங்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் அனைவரின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் துறையைச் சேர்ந்த சிலரின் செயல்களால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.
அவர்கள் உண்மையில் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள்.
இது எனக்கு அதிகாரத்திற்கு சவால் விடும் ஒன்று என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 1:45 pm
தனது முதல் மலேசியா பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் புறப்பட்டார் டிரம்ப்
October 27, 2025, 9:07 am
மொஹைதின் பதவி விலக வேண்டும்; அஸ்மின் நீக்கப்பட வேண்டும்: சைபுடின்
October 26, 2025, 9:20 pm
