செய்திகள் மலேசியா
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
ஈப்போ:
மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பேரா, கெடா, பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 4,743 ஆக இருந்தது.
இன்று காலை அந்த எண்ணிக்கை 5,806 ஆக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
பேராக்கில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான லாருட் மாத்தாங் செலாமா, மஞ்சோங், கிரியான், பேரா தெங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 993 குடும்பங்களைச் சேர்ந்த 2,922 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவு இந்த எண்ணிக்கை 955 குடும்பங்களைச் சேர்ந்த 2,806 பேராக இருந்தது.
பினாங்கில், நேற்று இரவு 252 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 279 குடும்பங்களைச் சேர்ந்த 1,026 பேராக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில் நேற்று இரவு 312 குடும்பங்களைச் சேர்ந்த 1,009 பேருடன் ஒப்பிடும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 587 குடும்பங்களைச் சேர்ந்த 1,858 ஆக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 11:44 am
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
