செய்திகள் மலேசியா
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
புத்ராஜெயா:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரை சந்திக்கிறார்.
இரண்டு முக்கியமான தலைவர்களும் அதிகாரப்பூர்வ வருகையாக மலேசியாவுக்கு வந்துள்ளனர்.
இந்த இரண்டு உயர்மட்ட வருகைகளும் ஆசியான் உச்சி மாநாடு, தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளின் தொடருக்கான முன்னோட்டமாகும்.
இதனால் தென் அமெரிக்க வட்டாத்திலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் மலேசியாவின் வெளி உறவுகளை வலுப்படுத்துகிறது.
லுலா டா சில்வாவின் அதிகாரப்பூர்வ வருகை மலேசியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
2023இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மலேசியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது.
பொருளாதார நீதி, உலகளாவிய செழிப்புக்காகப் போராடுவதில் இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது என்று பிரதமரின் மூத்த பத்திரிகை செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
