நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

காஜாங்:

காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் இதனை கூறினார்.

சுங்கை ரமால் கஜாங்கில் உள்ள காஜாங் ரிங் ரோடு-லெபுஹ்ரயா சிஸ்டம் அருகே உள்ள கால்வாயில் இறந்து கிடந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மரணமடைந்தவரின் உறவினர்களைக் கண்டுபிடிக்க போலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

நேற்று பிற்பகல் 2.22 மணியளவில் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு தகவல் கிடைத்தது.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த (IPD) சிலாங்கூர் போலிஸ்படையின் தடயவியல் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் குழுவுடன் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பரிசோதனையில் இனம் கண்டறிய முடியாத ஒருவரின் உடல் நீல நிற சட்டை, ஷார்ட்ஸ் அணிந்திருந்தது, காலணிகள் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

சுற்றுப்புறப் பகுதியில் ஆயுதங்களோ அல்லது தனிப்பட்ட பொருட்களோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் உடல் மோசமான நிலையில் இருந்தது மற்றும் சிதைவடையத் தொடங்கியது என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்ததில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.03 மணியளவில் ஒருவர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து செல்வதையும், பின்னர் சாலையில் உள்ள இரும்புச் சுவரில் ஏறி கால்வாயிலில் விழுவதையும் காண முடிந்தது.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. 

பிரேத பரிசோதனை முடிவுகள், உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் மரணத்திற்கான காரணம் என்பதை உறுதிப்படுத்தின.

இறந்தவரின் அடையாளம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால் திசைகாட்டி வடிவத்தில் அம்புடன் கூடிய பச்சை குத்தப்பட்டுள்ளது.  

அவரது இடது கையில் ஜோசப் என்ற வாசகம் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset