செய்திகள் மலேசியா
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
கோலாலம்பூர்:
ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வருகிறார்.
அவரின் வருகையை எதிர்த்து சுமார் 700 பங்கேற்பாளர்கள் அமெரிக்க தூதரகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தில் நிலவும் மோதலின் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இஸ்ரேலிய ஆட்சியுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்ததை விமர்சிக்கும் கோஷங்களை பங்கேற்பாளர்கள் எழுப்பினர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, பாஸ் இளைஞர்கள் ஏற்பாடு செய்த பேரணியில் பங்கேற்றவர்கள் மெனாரா தாபோங் ஹாஜியிலிருந்து பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
பாஸ் தலைவர்களைத் தவிர பெஜுவாங் கட்சியின் தகவல் தலைவர் முகமது ரபீக் ரஷீத் அலி, சமூக ஆர்வலர் தியான் சுவா ஆகியோரும் காணப்பட்டனர்.
காசாவில் மக்கள் கொல்லப்படுவதை அவரது நாடு இன்னும் ஆதரிக்கும் அதே வேளையில்,
மலேசியாவில் அவர் வரவேற்கப்படுவதில்லை என்பதை இன்று டிரம்ப் அறிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று பாஸ் இளைஞர் தலைவர் அப்னான் ஹமிமி தைப் அசமுடின் தூதரகத்திற்கு வெளியே பங்கேற்றவர்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
