நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி

கோலாலம்பூர்:

ரபிஸி ரம்லியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான  ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ராம்லியின் மகன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் செலுத்தப்பட்ட திரவம் தொடர்பான ரசாயன அறிக்கையை போலிசார் இன்னும் பெறவில்லை. இதனால் இதுவரை, அது இன்னும் வெளியிடப்படவில்லை.

இதைத் தொடர்ந்து முன்னேற்றங்கள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

புத்ராஜெயாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் கருப்பு உடை அணிந்த இரண்டு பேர் ரபிஸியின் மகனைத் தாக்கியதில் அவர் மீது திரவம் செலுத்தப்பட்டது குறித்த ரசாயன அறிக்கை போலிசாருக்குக் கிடைத்ததா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset