நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை

மனிதகுலம் சந்திக்கும் முப்பெரும் பிரச்சினைகளை அல்குர்ஆன் கூறும் முப்பெரும் தீர்வுகள் மூலம் தீர்க்க முடியும்.

1. இச்சை, மோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; உங்கள் தொழுகைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். 

ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்: 

’’அவர்களுக்குப் பின்னர் சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய சந்ததியில் தோன்றினார்கள். அவர்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை வீணாக்கினார்கள்”. (19:59)

2. துன்பம், தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; உங்கள் தாயுடன் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்: 

’’மேலும் என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். முரடனாகவும், துர்பாக்கியம் உடையவனாகவும் என்னை ஆக்கவில்லை”. (19:32)

3. கவலை, துயரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; அல்குர்ஆனுடன் உங்கள் தொடர்பு எவ்வாறு உள்ளது? என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்:

’’எவன் என்னுடைய நல்லுரையை புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்”. (20:124)

கூறப்பட்டவை உண்மைதான் என்று தோன்றினால் அடுத்தவருக்கும் அனுப்பிக் கொடுங்கள். 

இது நமக்குத் தேவையற்ற சமாச்சாரமாக இருக்கலாம். ஆனால் தேவைப்படுவோர் இன்னும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாம் சென்றுவிடுவோம். ஆனால் நமது நற்செயல்கள் அப்படியே இருக்கும்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset