நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி கொண்டாட்டங்களின் போது ஒற்றுமையை அனைத்து மலேசியர்களுக்கும் வலுப்படுத்த வேண்டும்: துணைப் பிரதமர் ஜாஹித்

பாகான் டத்தோ:

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களின் போது ஒற்றுமையை அனைத்து மலேசியர்களுக்கும் வலுப்படுத்த வேண்டும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மலேசியாவின் பன்முக இன,   கலாச்சார சமூகத்தின் அடித்தளமாக சகிப்புத்தன்மை, மரியாதை, அன்பின் உணர்வைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த கொண்டாட்டம் அதைக் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.

இருளை ஒளிரச் செய்யும் ஒரு விளக்கின் ஒளியைப் போலவே, மலேசியர்களின் ஒற்றுமை இந்த நாட்டை வளமான,  அமைதியான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும் ஒளியாகத் தொடரும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக  தீபாவளி நல்வாழ்த்துகள் என்ற தமிழ் வாழ்த்துக்களுடன் துணைப் பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset