
செய்திகள் மலேசியா
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
புக்கிட் மெர்தாஜாம்:
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ அஸிசி இஸ்மாயில் இதனை கூறினார்.
கம்போங் செகோலா ஜூருவில் உள்ள வாடகை வீட்டில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது.
இதில் ஆடவரின் மனைவி, மகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக 57 வயது நபர் கைது செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை அடையாளம் காண போலிசார் இன்னும் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
முன்னதாக 51 வயது பெண், அவரது 11 வயது மகளின் உடல்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் இங்குள்ள கம்போங் செகோலா ஜூருவில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் அவரது கணவரால் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 19, 2025, 10:55 am
நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 19, 2025, 10:36 am