நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் ஆபத்தான பொருட்களுக்கு தடை விதிப்பதுடன் மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்: சரஸ்வதி

கோலாலம்பூர்:

பள்ளிகளில் ஆபத்தான பொருட்களைக் கட்டுப்படுத்துவதுடன் மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்.

மஇகா மகளிர் பிரிவுத் தலைவரும் கெமேலே சட்டமன்ற உறுப்பினருனான சரஸ்வதி வலியுறுத்தினார்.

பெட்டாலிங் ஜெயாவில் தனது பள்ளி மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்த படிவம் 4 மாணவியை உள்ளடக்கிய துயரச் சம்பவத்தின் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

இந்தச் சம்பவம் மிகவும் மனவேதனை அளிக்கிறது.

மேலும் மாணவர்களின் பாதுகாப்பு, உணர்ச்சி நல்வாழ்வு, மன நிலஜ் ஆகிய அம்சங்களில் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்ட வேண்டும்.

பள்ளிகளில் ஆபத்தான பொருட்களைக் கட்டுப்படுத்துவதுடன் மாணவர்கள் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்.

பள்ளி மட்டத்தில் வலுவான ஆலோசனை ஆதரவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்ய கல்வி அமைச்சை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கேட்பது, புரிந்துகொள்வது,  கண்காணிப்பதில் பெற்றோர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

குறிப்பாக அதிகரித்து வரும் சவாலான,  மன அழுத்தம் நிறைந்த உலகில்  இது முக்கிய பங்கு நடவடிக்கையாகும்.

இந்த மாணவியின் இதயத்தை உடைக்கும் இழப்புக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

இந்தப் பெரிய குற்றச்சாட்டை எதிர்கொள்வதில் அவர்கள் வலுவாக இருப்பார்கள்

போலிசாரின் விசாரணை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை வழங்கும் என்றும் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset