நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய ஆதாரங்கள் இல்லாததால் பன்னீர் செல்வத்தின் வழக்கு விசாரணை தொடரவில்லை: போலிஸ்

கோலாலம்பூர்:

புதிய ஆதாரங்கள் இல்லாததால் பன்னீர் செல்வத்தின் வழக்கு விசாரணையை போலிஸ் தொடரவில்லை.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

சிங்கப்பூரில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் மலேசிய நாட்டைச் சேர்ந்த பி.பன்னீர் செல்வத்தின் வழக்கில், புதிய தகவல்கள் அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் போலிசார் மேலும் விசாரணைகளைத் தொடர முடியவில்லை.

கடந்த செப்டம்பர் 27 அன்று சிங்கப்பூரின் சாங்கி சிறைச்சாலைக்கு தமது துறை அதிகாரிகள் மேற்கொண்ட விஜயம் உட்பட புதிய ஆதாரங்களைப் பெறுவதற்கான முயற்சிகளில், மலேசியாவில் மேலும் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பன்னீர் செல்வத்தின் குடும்ப உறுப்பினர்கள், கைதிக்கு ஒரு சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டு குடியரசிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

கடந்த 2022, பிப்ரவரி 2025 இல் சம்பந்தப்பட்ட நபரை போலிஸ் அடையாளம் கண்டுள்ளது. 

இருப்பினும், வழங்கப்பட்ட தகவல்களுக்கு செயல்பாட்டு மதிப்பு இல்லை.

பன்னீர் செல்வம் சம்பந்தப்பட்ட வழக்கில் அந்த நபரை இணைக்க முடியவில்லை என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset