
செய்திகள் மலேசியா
மனிதாபிமானப் பணியை குற்றமாக்கக் கூடாது; மலேசியாவின் காசா தன்னார்வலர்களை உடனடியாக விடுதலை செய்க: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மனிதாபிமானப் பணியை குற்றமாக்கக் கூடாது. ஆக மலேசியாவின் காசா தன்னார்வலர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மஇக் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
இஸ்ரேலியப் படைகளால் குளோபல் சுமுத் புளோட்டிலா இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு மஇகா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
கப்பலில் உள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் மரியாதைக்குரிய இராஜதந்திர நிலைப்பாட்டையும் சர்வதேசத் தலைமையையும் பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாகவும் நிபந்தனையின்றியும் விடுவிப்பதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
அனைத்துலக கடலில் அமைதியான மனிதாபிமானப் பணியை இடைமறிப்பது சர்வதேச சட்டத்தின் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
காசா மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
நீதி, அமைதி, மனிதாபிமான நிவாரணத்திற்கான காரணத்தை மலேசியா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது.
மேலும் மலேசிய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு மஇகா முழு ஒற்றுமையுடன் நிற்கிறது
நீதியைப் பெறுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் எங்கள் உறுதியான ஆதரவை உறுதிப்படுத்துகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2025, 10:36 pm
கட்டடங்களின் பாதுகாப்பை சோதிக்கவிருக்கும் ஜோகூர் மாநில அரசு
October 2, 2025, 10:16 pm
நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்: போலிஸ்
October 2, 2025, 6:42 pm
காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
October 2, 2025, 4:40 pm
டான்ஸ்ரீ மொஹைதின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்: பைசல்
October 2, 2025, 3:26 pm
காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது அமெரிக்க தூதரகம் முன் கண்டன மறியல்
October 2, 2025, 1:57 pm
11 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது
October 2, 2025, 1:29 pm
இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பிரதமர்
October 2, 2025, 12:28 pm
இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
October 2, 2025, 12:23 pm