நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியப் பயிற்சி திட்ட குறியீட்டை அறிமுகப்படுத்த  மலேசியா, திமோர் லெஸ்தேவுடன் கைகோர்ந்துள்ளது

கோலாலம்பூர்:

தேசிய பயிற்சி திட்ட குறியீட்டை அறிமுகப்படுத்த மலேசியா, திமோர் லெஸ்தேவுடன் கைகோர்ந்துள்ளது.

எச்ஆர்டி கோர்ப் எனும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் நாட்டின் முதல் தேசிய பயிற்சி திட்ட குறியீடு உருவாக்கப்பட்டது.

தற்போது இத்திட்டத்தை விரிவுபடுத்த எச்ஆர்டி கோர்ப் திமோர் லெஸ்தேவின் தேசிய தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

சான்றுகள் சார்ந்த பணியாளர் திட்டமிடல், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

திமோர் லெஸ்தேவின் துணைப் பிரதமர் பிரான்சிஸ்கோ கல்புவாடி லே தலைமையில் கடந்த செப்டம்பர் 15 முதல் 19 வரை டிலி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2ஆவது திமோர் லெஸ்தே சர்வதேச திறன் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் போது  கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஒத்துழைப்பு தொடங்கியது.

எச்ஆர்டி கோர்ப்  தேசிய பயிற்சி திட்ட குறியீட்டின் தேசிய பயிற்சி நடவடிக்கைகளை அளவிடுகிறது.

திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து பணியாளர் தயார்நிலையை வலுப்படுத்த கொள்கை பரிந்துரைகளை வழங்குகிறது. 

திமோர் லெஸ்தேவுக்கான அதன் தழுவல் பிராந்திய அறிவு பரிமாற்றத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.

மேலும் ஆசியான் ஒத்துழைப்புக்கு ஒரு அளவுகோலை அமைக்கிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இரு நிறுவனங்களும் திறன் மாற்றத்தில் நீண்டகால கூட்டாளர்களாக இணைந்து செயல்படும்.

ஆராய்ச்சி ஒத்துழைப்பை எளிதாக்கும். பயிற்சி வரி முறையை ஆராய்வதோடு, பரஸ்பர பயிற்சி சந்தை மூலம் பயிற்சித் திட்டங்கள், கல்வி உள்ளடக்கம், தொழில்முறை நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ளும்.

இந்தக் ஒத்துழைப்பு ஆசியான் திறன் ஆண்டுடன் ஒத்துப்போகிறது.

மேலும் 2026 இல் 10ஆவது ஆசியா உலக திறன் மாநாட்டை நடத்துவதற்கு திமோர் லெஸ்தேவை முன்னிலைப்படுத்துகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset