
செய்திகள் மலேசியா
காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது அமெரிக்க தூதரகம் முன் கண்டன மறியல்
கோலாலம்பூர்:
காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் முன் இன்று கண்டன மறியல் நடத்தப்பட்டது.
ஜிஎஸ்எப் எனும் காசாவிற்கான மனிதாபிமான உதவித் தன்னார்வலர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகல் 12 மணி முதல் இங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்புப் படையினர் அமெரிக்க தூதரகத்தை நெருங்குவதைத் தடுப்பதைக் காண முடிந்தது.
மேலும் சந்தித்த ஒரு பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, இந்தக் கூட்டம் கடைசி நிமிடத்தில் திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் மாலை 4 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தலைகீழாக நடந்துள்ளது.
பேரணியில் பங்கேற்ற 51 வயதான ரினா ஆலிம், மனிதாபிமான உதவிப் பணிக்கு ஆதரவைத் தெரிவிக்கவும், மலேசியாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட 201 ஜிஎஸ்எப் ஆர்வலர்களை இஸ்ரேல் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் பேரணியில் இணைந்ததாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2025, 10:36 pm
கட்டடங்களின் பாதுகாப்பை சோதிக்கவிருக்கும் ஜோகூர் மாநில அரசு
October 2, 2025, 10:16 pm
நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்: போலிஸ்
October 2, 2025, 6:42 pm
காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
October 2, 2025, 4:40 pm
டான்ஸ்ரீ மொஹைதின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்: பைசல்
October 2, 2025, 1:57 pm
11 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது
October 2, 2025, 1:29 pm
இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பிரதமர்
October 2, 2025, 12:28 pm
இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
October 2, 2025, 12:23 pm