நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

VEP வாகன நுழைவு அனுமதி: 3,148 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்

ஜோகூர்பாரு:

மலேசியாவிற்குள் செல்வதற்கான VEP வாகன நுழைவு அனுமதி முறை இவ்வாண்டு ஜூலை மாதம் முழுமையாக நடப்புக்கு வந்ததிலிருந்து 3,148 சிங்கப்பூர் ஒட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் (செப்டம்பர் 2025) 28ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 289,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதியிலிருந்து வாகன நுழைவு அனுமதியின்றி மலேசியா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுகிறது.

மலேசியாவைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஓட்டுநர்கள் அபராதத்தைச் செலுத்தவேண்டும்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset