நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,602 ஆகக் குறைந்தது

கோத்தா கினபாலு:

சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,602 ஆகக் குறைந்துள்ளது.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இதனை தெரிவித்தது.

சபாவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 806 குடும்பங்களைச் சேர்ந்த 2,602 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று மாலை 964 குடும்பங்களைச் சேர்ந்த 3,325 பேராக இருந்தது.

அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் இப்போது 22 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவை ஆறு மாவட்டங்களில்.அதாவது பியூஃபோர்ட், பெனாம்பாங், மெம்பாகுட், பாப்பர், புட்டாடன், சிபிடாங் ஆகியவற்றில் திறக்கப்பட்டுள்ளன என அக்குழு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset