
செய்திகள் மலேசியா
ரோன் 95க்கான இலக்கு மானியம்; அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: சைபுடின்
கோலாலம்பூர்:
ரோன் 95க்கான இலக்கு மானியத்தை பெறுவதற்கு அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை வலியுறுத்தினார்.
ரோன் 95 பெட்ரோலுக்கான மானிய இலக்கு இந்த மாத இறுதியில் அரசாங்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மானியத்தை அனுபவிக்க, சேதமடைந்த அடையாள அட்டை சிப்புகளை அனைவரும் உடனடியாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.
மானியத்தை செயல்படுத்த, நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் செயல்பாட்டின் போது அடையாள அட்டையை பயன்படுத்தி அடையாள சரிபார்ப்பு தேவை என்று அவர் கூறினார்.
இந்த இலக்கு மானியத்தின் மூலம் ரோன் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகக் குறையும்.
மலேசியர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
சிப் வேலை செய்கிறதா, நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 12:21 pm
கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது: சுகாதார அமைச்சர்
September 19, 2025, 11:21 am
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
September 19, 2025, 11:18 am
வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்
September 19, 2025, 11:08 am
சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm