
செய்திகள் மலேசியா
சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி
சைபர்ஜெயா:
சின் சியூ, சினார் ஹரியான் ஊடகங்களுக்கு தலா 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இதனை கூறியது.
இரண்டு உள்ளூர் ஊடக நிறுவனங்களான சின் சியூ மீடியா கார்ப்பரேஷன் பெர்ஹாட், சினார் காரங்கிராஃப் எஸ்டிஎன் பெர்ஹாட் ஆகியவற்றுக்கு தலா 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறை தலைவர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்த பின்னர் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
சின் சியூ டெய்லி தேசியக் கொடியை முழுமையற்ற காட்சியை வெளியிட்ட குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
தேசியக் கொடி நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, கண்ணியத்தின் சின்னம்.
அது எல்லா நேரங்களிலும் துல்லியமாகவும் மரியாதையுடனும் காட்டப்பட வேண்டும் என்றும் எம்சிஎம்சி வலியுறுத்தியது
அதே போன்று சினார் ஹரியான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஜிபி காலித் இஸ்மாயில் பற்றிய தவறான தகவல்களைப் பதிவிட்டு,
உள்ளூர் அரசியல் கட்சியின் உயர் பதவியில் இருக்கும் நபருடன் அவரை இணைத்து வெளியிட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என எம்சிஎம்சி கூறியது.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 12:21 pm
கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது: சுகாதார அமைச்சர்
September 19, 2025, 12:17 pm
ரோன் 95க்கான இலக்கு மானியம்; அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: சைபுடின்
September 19, 2025, 11:21 am
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
September 19, 2025, 11:18 am
வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm