
செய்திகள் மலேசியா
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
செப்டம்பர் 16 மலேசியா தினம் முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
நாட்டின் நீண்ட பயணத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய தினம் கொண்டாடப்பட வேண்டும்.
மேலும் செப்டம்பர் 16 என்பது நாட்காட்டியில் வெறும் குறிப்பு அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அது தேசியக் கொடியின் கீழ் ஒன்றுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் கதையை இந்நாள் பிரதிபலிக்கிறது.
இன்று நாம் துணிச்சலில் பிறந்த மலேசியர்களாக, பன்முகத்தன்மையில் வளர்க்கப்பட்டு, கம்பீரமான தேசியக் கொடியில் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்.
மலேசியாவின் தனித்துவம் நம்மிடம் உள்ள பன்முகத்தன்மையில் தான் உள்ளது.
இன வேறுபாடுகள் ஒரு பிரிவினை அல்ல, மாறாக மலேசியாவை தனித்துவமாகவும் அசாதாரணமாகவும் மாற்றும் ஒரு பலம்.
மலேசியா தினம் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மையின் பிரதிபலிப்பாகவும், எப்போதும் நம்பிக்கை கொண்ட உறுதியுடனும் இருப்பதாக அவர் மலேசிய தின வாழ்த்து செய்தியில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 8:47 am
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm