
செய்திகள் மலேசியா
தீபாவளி நெருங்கி விட்டதால் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், ராஜசேகரன் கோரிக்கை
கோலாலம்பூர்:
தீபாவளி நெருங்கி விட்டதால் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும்.
மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.
வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தீபாவளி பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இதனால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய அந்நியத் தொழிலாளர்களை அரசு விரைந்து கொடுக்க வேண்டும்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆனால் 30 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு கிடைத்துள்ளன.
சிகை அலங்காரம், நகைக் கடைகள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவை படுகிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் விரைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும் Gantian எனப்படும் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
September 13, 2025, 2:01 pm
நியாயமான பல்கலைக்கழக தேர்வு முறைக்கான நேரம் வந்துவிட்டது: கணபதி ராவ்
September 13, 2025, 12:25 pm
மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்
September 13, 2025, 12:24 pm
என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி
September 13, 2025, 12:17 pm
பகடிவதை சம்பவங்களை கட்டுப்படுத்த கல்வியமைச்சு பகடிவதை கல்வியை அமல்படுத்த வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 13, 2025, 10:57 am