
செய்திகள் மலேசியா
ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலிசார் கைது செய்தனர்
பெஸ்தாரி ஜெயா:
ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலிசார் கைது செய்தனர்.
கோலா சிலாங்கூர் போலிஸ் தலைவர் அசாஹருதீன் தாஜுடின் இதனை தெரிவித்தார்.
நேற்று பெஸ்டாரி ஜெயாவின் லாடாங் புக்கிட் படோங்கில் உள்ள ஒரு ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவின் நடைபெற்றது.
அப்போது வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு இந்த சம்பவத்தைக் காட்டும் வைரலான வீடியோ தொடர்பாக போலிஸ் துறைக்கு புகார் கிடைத்தது.
நேற்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சிலாங்கூர் போலிஸ்படையில் குற்றப்பிரிவு, கோல சிலாங்கூர் போலிஸ்படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உதவுவதற்காக, இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு 1960 ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இன்று முதல் செப்டம்பர் 4 வரை மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm