
செய்திகள் மலேசியா
தனியார் பாலர் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு மித்ராவின் கீழ் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரபாகரன்
புத்ரா ஜெயா:
அறிவு மிக்க குழந்தை, சிறப்பான நாடு திட்டத்தின் கீழ் தனியார் பாலர் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு மித்ரா 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி உள்ளது.
மித்ரா தலைவர் பிரபாகரன் இதனை அறிவித்தார்.
மித்ராவில் 10 மில்லியன் நிதியை, பி40 குடும்பத்தைச் சேர்ந்த 5,000 பாலர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம பி40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தின் மலேசியக் கல்வி மேம்பாட்டு திட்டம் 2013-2025-க்கு ஏற்ப செயல்படுத்தப் படுகிறது.
மித்ரா தனியார் முன்பள்ளி நிர்வாகிகளிடமிருந்து மொத்தம் 178 விண்ணப்பங்களை பெற்றது.
பரிசீலனைக்கு பின், 173 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதன் மூலம் 4,025 பாலர் பள்ளி குழந்தைகள் நன்மை அடைகின்றனர்,
மொத்த நிதி ஒதுக்கீடு 7,750,575.00 ரிங்கிட்டாகும். இந்த உதவித்தொகை, தகுதி வாய்ந்த தனியார் முன்பள்ளிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் ஒருமுறை கட்டணமாக வழங்கப்படும்.
தகவலுக்காக, தகுதியான பாலர் பள்ளி மற்றும் குழந்தைகளின் பெயர் பட்டியலை 2025 செப்டம்பர் 8 முதல் மித்ரா அகப்பக்கத்தில் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டம் 2025 குறித்து கேள்விகள் இருந்தால், வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை 03-8892 3442 என்ற எண்களில் மித்ராவைத் தொடர்புகொள்ளலாம் அல்லது spl@mitra.gov.my
என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm