
செய்திகள் மலேசியா
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
கோல குபு பாரு:
கம்போங் ஓராங் அஸ்லி பெர்த்தாக்கில் ஆற்றின் நீர் பெருக்கத்தில் சிக்கிய 12 போலிஸ் அதிகாரிகள் உட்பட 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.
இன்று மதியம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது பெய்த கனமழையைத் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை தொடர்ந்து இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தனது துறைக்கு மாலை 6.42 மணிக்கு அவசர அழைப்பு வந்ததது.
கோலா குபு பாரு தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு மீட்பு குழு, ஒரு ஹிலக்ஸ் பயன்பாட்டு வாகனம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தன.
இது நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அவர்கள் இரவு 7.07 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்துடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm