
செய்திகள் மலேசியா
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
கோலாலம்பூர்:
சீனாவில் திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.
ஏற்கெனவே 500 இந்திய மாணவர்கள் சீனாவில் தீவேட் கல்வியை பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மித்ரா தலைவர் பிரபாகரன் மேலும் 500 மாணவர்களுக்கு சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில வாய்ப்பு வழங்குங்கள் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
அவரின் கோரிக்கை ஏற்று அடுத்த ஆண்டு அல்ல இந்த ஆண்டே மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பலத்த கரவொலிக்கிடையே டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
மித்ராவின் மலேசிய சீனா இடையே திவேட் தொழில் திறன் பயிற்சி திட்ட நிகழ்வு இன்று மிகப்பெரிய அளவில் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இதை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm