நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறுப்பற்ற அறிக்கைகள் இனங்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும்: பேரா பாஸ் இளைஞர் தலைவருக்கு பாப்பாராயுடு அறிவுறுத்து

ஷாஆலம்:

பொறுப்பற்ற அறிக்கைகளினால் இனங்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதுடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேரா பாஸ் இளைஞர் தலைவருக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு அறிவுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு முன் பாஸ் மலேசிய இளைஞர் துணைத் தலைவர் முஹம்மத் ஹபீஸ் சப்ரி சிந்திக்க வேண்டும்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரான முஹம்மத் ஹபீஸ் அனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

மேலும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவது மக்களை தவறாக வழிநடத்துவதும். குறிப்பாக இனங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்தும்.

ஒரு சம்பவத்தில் இனக் காரணங்களுடன் இணைப்பது நியாயமற்றது. மேலும் அது ஆபத்தானது.

ஏனெனில் அது கேள்விக்குரிய இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

இந்த சம்பவம் சில தனிநபர்களை மட்டுமே உள்ளடக்கியது  என்று பாப்பாராயுடு கூறினார்.

அனைத்து தரப்பினரும் குறிப்பாக சமூகத் தலைவர்கள், மரியாதைக்குரிய நாடாளுமன்ற சட்டமமன்ற உறுப்பினர்கள்  சிந்தனை மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.

எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளைச் சரிபார்த்து, செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

அரசியல் நலன்களுக்காக, 68 ஆண்டுகளாக நாம் பாதுகாத்து வந்த மக்களின் ஒற்றுமையை பாழாக்க வேண்டாம் என்று அவர் இன்று ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று முஹம்மது ஹபீஸ் பதிவேற்றிய ஒரு பதிவில் ஈப்போவில் சுதந்திர தின விழாவில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுகிய ஒரு பெண்ணை, சீனப் பெண் என தொடர்புபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset