
செய்திகள் உலகம்
5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை; இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர் பாதிப்படைவர்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
நியூ யார்க்:
அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள்.
அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியுரிமைத் துறை எடுத்து வரும் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்காக இந்த மறுபரிசீலனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுற்றுலா, மாணவர்கள், தொழில்முறை பயணம் உள்ளிட்ட விசாக்களை வைத்திருப்பவர்கள், தொடர்ச்சியான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அவர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் இருக்கிறதா? விசா காலத்தைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா? குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா? மக்களின் பாதுகாப்பு இடையூறு ஏற்படுத்துகிறார்களா என்பது, அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறதா என்பது உள்ளிட்ட விவகாரங்களையும் பரிசீலிக்க அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மறுஆய்வு நடவடிக்கையானது, விசா பெற்றிருப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆராய்வது, சட்ட அமலாக்கத் துறை, விசா பெற்றிருப்பவரின் சொந்த நாட்டில் பதிவாகியிருக்கும் குடியுரிமைப் பதிவுகள், அமெரிக்க சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறாரா என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா நேர்காணல்களின்போது, எலாக்ட்ரானிக் சாதனங்கள் முடக்கப்படுவது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இந்த ஆணடு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல், உள்நாட்டு வருவாய் சேவை துறையிடமிருந்து குடியுரிமை பெற்றவர்களின் வரி தரவுகளையும் பெற்று ஏதேனும் விதிமீறல் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை, அமெரிக்காவில் விசா பெற்று தங்கியிருப்பவர்கள் யாரேனும் ஏதோ ஒரு விதிமீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 50 லட்சம் பேர், அமெரிக்காவின் குடியுரிமை அல்லாத விசாக்களை வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சுற்றுலா, வணிகம், கல்வி மற்றும் பி1/பி2 பார்வையாளர் விசா, எஃப்1 மாணவர்கள் விசா, எச்-ஃபி வேலை விசாக்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அமெரிக்க உள்துறை அமைச்சகம் சுமார் 6000 மாணவர்கள் விசாக்களை ரத்து செய்திருக்கிறது. இதில், விசாக் காலத்தைத் தாண்டி தங்கியிருப்பது, யாரையாவது தாக்குவது, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காவும் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm
ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்?: காணொலி வெளியாகி பரபரப்பு
September 1, 2025, 8:46 pm
ஊழியரை ஏமாற்றிய நிறுவனம்: 4.3 லட்சம் திர்ஹம் வழங்க உத்தரவிட்ட அபுதாபி நீதிமன்றம்
September 1, 2025, 8:30 pm
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
September 1, 2025, 5:22 pm