
செய்திகள் உலகம்
BREAKING NEWS: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையால் கைது
கொழும்பு:
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இன்று காலை விசாரணைக்காக அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்த விசாரணை தொடர்பாக, 2023 செப்டம்பர் 22, 23 ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுகின்றன.
இந்தப் பயணத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் 10 பேர் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை தொடர்பாக, முன்னதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சான்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
இந்த சம்பவம் இலங்கை அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm
ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்?: காணொலி வெளியாகி பரபரப்பு
September 1, 2025, 8:46 pm
ஊழியரை ஏமாற்றிய நிறுவனம்: 4.3 லட்சம் திர்ஹம் வழங்க உத்தரவிட்ட அபுதாபி நீதிமன்றம்
September 1, 2025, 8:30 pm
சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது
September 1, 2025, 5:22 pm