நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் பள்ளிக்கூடத்தில் மாணவனை பகடிவதை செய்த சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும்:  அமைச்சர் ஃபட்லினா  

ஜோகூர் பாரு:

ஜோகூரில் ஒரு மாணவி சம்பந்தப்பட்ட பகடிவதை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும், பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.

இந்த சம்பவத்தை தான் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கொடுமைப்படுத்துதல் விஷயத்தில் எந்த சமரசமும் இருக்காது என்றும் ஃபட்லினா வலியுறுத்தினார்.

"இது நியாயமாகவும் வெளிப்படையாகவும் கையாளப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

நேற்று, மூக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் தாயான ஒரு பெண், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சமயப் பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு தனது மகன் மூளையதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படும் 12 வயது மாணவன், அவன் வயது குறைந்தவன் என்பதால், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஜோகூர் கல்வித் துறை பாதிக்கப்பட்டவரைப் பார்வையிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் ஃபட்லினா கூறினார்.

"இந்தக் குழந்தை விரைவில் குணமடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset