நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குச் சாலைக் கட்டணம் இல்லை

கோலாலம்பூர்:

சாலைக் கட்டணம் செலுத்துவிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதனை தெரிவித்தது. 

வரும் அக்டோபர் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ‘இபிட்மோட்டார்.காம்’ சமூக ஊடகப்பக்கத்தில் காணப்படும் பதிவு பொய்யானது.

இத்தகைய பொய்த்தகவல்கள், மோட்டார் சைக்கிளோட்டிகளைத் தேவையில்லாமல் பதற்றமடையச் செய்வதுடன் அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் ஆணையம் எச்சரித்தது.

வாகன எண் பலகையை அடையாளம் காணும் தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறந்த முறையைத்தான் தற்போது  சோதிக்கப்பட்டு வருவதாக ஆணையம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset