நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு  பேரணியில் 200,000 பேர் கலந்து கொண்டதாக தேசிய கூட்டணி அறிவிப்பு; 18,000 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்: போலிஸ்

கோலாலம்பூர்:

அன்வார் எதிர்ப்பு பேரணியில் 200,000த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஆனால் 18 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாக போலிஸ் மதிப்பிட்டுள்ளது.

எங்களின் சொந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியது.

தேசியக் கூட்டணி இளைஞர் பிரிவு  அமைப்பாளர் அப்னான் ஹமிமி கூறினார்.

முன்னதாக அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்ட டாட்டாரான் மெர்டேகாவில் உள்ள மேடையைத் தவிர,  எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நடக்கவில்லை.

மேலும் முழு பேரணியும் அமைதியாக இருந்தது என்று கோலாலம்பூர் போலிஸ்படையின் தற்காலிகத் தலைவர் யூசுப் ஜான் முகமது கூறினார்.

பேரணி முழுவதும் நியமிக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகளுக்கு பிரச்சினைகளை தூண்டாமல்  அமைதியாகக் கூடியதற்காகவும், பங்கேற்பாளர்களுக்கு யூசுப் தனது நன்றியைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset