நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அகமதாபாத் விமான விபத்து: இங்கிலாந்துக்கு உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதாகக் குடும்பங்கள் குற்றச்சாட்டு

பிரிட்டன்: 

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த 2 இங்கிலாந்து நாட்டவரின் உடல்களுக்குப் பதிலாக தவறான உடல் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடல்கள் இங்கிலாந்தில் உள்ள சில குடும்பங்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டதாக ஒரு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு வேறு நபர்களின் உடல்கள் அல்லது பலரது உடல்களின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

லண்டன் மரண விசாரணை அதிகாரி டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது இந்த விவகாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒரு குடும்பம் இறுதி சடங்கை ரத்து செய்தது.

மற்றொரு குடும்பத்திற்கு பலரது உடல் பாகங்கள் ஒன்றாக அனுப்பப்பட்டு, அவற்றைப் பிரித்த பிறகு இறுதி சடங்கு செய்ய நேர்ந்தது.

இந்நிலையில் உடல்களை அடையாளம் காண உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், உடல்கள் கண்ணியத்துடன் கையாளப்பட்டன என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், ஏர் இந்தியாவுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset