நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி

சிங்கப்பூர்:

கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஏசிமிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

அதே வேளையில் இந்த ஆட்டத்தை காண உலகளாவிய ரசிகர்கள் சிங்கப்பூரில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் அதன் முன்னணி ஆட்டக்காரர் புகாயோ சகா அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியின் இவ்வாட்டத்தின் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset