
செய்திகள் உலகம்
தென் கொரியாவில் பிறப்பு விகிதம் உயர்வு
சியோல்:
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியா உலகின் மிக நீண்ட ஆயுட்கால விகிதமும் மிகக் குறைந்த பிறப்பு விகிதமும் கொண்ட நாடாகும்.
பெண்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், மக்கள்தொகை நிலையாக இருப்பதை உறுதி செய்யவும் அரசு பில்லியன் கணக்கில் டாலரைச் செலவிட்டுள்ளது.
ஜனவரி முதல் மே வரை பிறந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 6.9 விழுக்காடு அதிகரித்து சுமார் 106,000ஆக இருந்தது.
2024-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 8,300 அல்லது 3.6 விழுக்காடு அதிகரித்து 238,300 ஆக உயர்ந்தது.
முப்பது வயதின் தொடக்கத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒட்டுமொத்தமாக திருமணங்களின் எண்ணிக்கை கூடியது. அதனால் பிறப்பு விகிதமும் உயர்ந்துள்ளது என்று புள்ளியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் சுந்தர் பிச்சை
July 26, 2025, 2:57 pm