
செய்திகள் உலகம்
பிறந்தநாளில் மகனுக்கு மரணத்தை பரிசாக தந்தை, அடுக்குமாடி குடியிருப்பில் வெடிக் குண்டையும் வைத்துள்ளார்: சியோலில் பரபரப்பு
சியோல்:
தென் கொரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியபோது, ஒரு நபர் தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது மாமனார் தனது கணவரைச் சுட்டுக் கொன்றதாக ஒரு பெண்ணிடமிருந்து போலிசாருக்கு அவசர அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கிடந்ததைக் கண்டனர்.
30 வயதுடைய பாதிக்கப்பட்டவர் பின்னர் இரவு 11.09 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆனால் அதிகாலை 12.20 மணியளவில் சியோலின் கங்னம் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்று சியோல் போலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்டபோது 63 வயதான சந்தேக நபர் இன்னும் ஒரு ஆயுதத்தை வைத்திருந்தார்.
அது பக்ஷாட் நிரப்பப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட குழாய் வடிவ துப்பாக்கி. இதை கொண்டு தான் அவர் தனது மகனின் மார்பில் சுட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேக நபர் தனது வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக போலிசாரிடம் கூறினார்.
இதனால் அதிகாரிகள் உடனடியாக 105 குடியிருப்பாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்து, சிறப்பு போலிஸ் குழுவை கொண்டு சோதனை நடத்தியது.
பின்னர் பாதுகாப்புப் படையினர் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டை செயலிழக்கச் செய்தனர். இது மதியம் 12 மணிக்கு வெடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm