நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு

புது டெல்லி:

மும்பையில் 2006-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவ வழக்கில் தொடர்புடைய 12 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மும்பை புறநகர் 7 ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேருக்கு 2015-இல் சிறப்பு நீதிமன்றம்  ஆயுள், மரண விதித்தது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் அனில் கிலோர்,  ஷ்யாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.

இவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset