
செய்திகள் இந்தியா
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
புது டெல்லி:
மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் அந்த மாநில மக்களுக்கு பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்தது.
2023-இல் குகி, மைதேயி இன மோதல் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
லட்சக்கணக்கானவர்கள் முகாம்களில் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரமும் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இதையடுத்து பிரதமர் மோடி மணிப்பூக்கு சனிக்கிழமை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் இப் பயணத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிற மாநிலங்களுக்கான பயணத்துக்கு இடையே 3 மணிநேர இடைவேளை போல் மணிப்பூருக்கு பிரதமர் சென்றுள்ளார். இது, மனிதாபிமான நோக்கம் கொண்டதல்ல; வெறும் சம்பிரதாயப் பயணம். காயம்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு. மக்களின் கூக்குரலை கேட்பதில் இருந்து தப்பித்து, வழக்கமான சாலை ஊர்வலம் நடத்தியுள்ளார் பிரதமர்.
மணிப்பூர் துயரங்களுக்கு மத்தியில் பிரதமர் 46 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி, மணிப்பூரில் அப்பாவி மக்களின் வாழ்வை அழித்துவிட்டது. அங்கு வன்முறை நீடிக்கிறது.
மணிப்பூரில் பிரதமர் தனக்கு தானே நடத்திக் கொண்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி, மக்களின் காயத்தின் மீதான கொடூர தாக்குதலாகும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm