
செய்திகள் இந்தியா
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
பெங்களூரு:
மைசூரில் நடைபெறும் தசரா திருவிழாவைத் தொடங்கி வைக்க சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு கர்நாடக மாநில அரசு அழைத்ததற்கு எதிராக பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எழுத்தாளர் பானு முஷ்தாக்கை அழைத்ததன் மூலம் காலம்காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவைத் தொடங்கிவைக்க, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.
எனவே, பானு முஷ்தாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று பிரதாப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசு நிகழ்ச்சியை மாற்று மதத்தை சேர்ந்தவர் தொடங்கிவைப்பதாக கூறுவது ஏற்க முடியவில்லை என்று உத்தரவிட்டு தள்ளுபடி செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm