
செய்திகள் உலகம்
17.5 மில்லியன் பயணிகள் சாங்கி நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்
சிங்கப்பூர்:
இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சுமார் 17.5 மில்லியன் பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட இது 5.9 விழுக்காடு அதிகம் என்று 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரம் காட்டுகிறது.
மேலும், இந்த எண்ணிக்கை கோவிட்-19 கிருமி தொற்றுக்கு முன் 2019-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட அது 4 விழுக்காடு அதிகமாகும்.
சாங்கி விமான நிலையக் குழுமம் இன்று அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
ஏப்ரலில் மட்டும் சாங்கி விமான நிலையத்தை 5.78 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர்.
மே மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 5.82 மில்லியனாகவும் ஜூன் மாதத்தில் அது 5.88 மில்லியனாகவும் பதிவானது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவிலிருந்தே அதிகமான பயணிகள் விமான நிலையத்தைக் கடந்தனர்.
இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் இடம்பெற்றுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 22, 2025, 6:44 pm
சிங்கப்பூரின் முக்கிய தகவல் உள்கட்டமைப்பு மீது இணையத் தாக்குதல்: தற்காப்பு அமைச்சர் சான்
July 22, 2025, 6:25 pm
வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்
July 22, 2025, 4:56 pm
சுவிஸ் சாக்லெட்டை உலகில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்: YouGov நிறுவனம்
July 22, 2025, 4:20 pm
ரஷ்யாவில் பேருந்து விபத்து: 13 பேர் மரணம்
July 22, 2025, 3:42 pm
மகனால் உருமாற்றம் கண்ட தாய்
July 22, 2025, 3:32 pm
வில்லியம், ஹாரி இளவரசர்களின் உறவினர் மர்மமாக உயிரிழப்பு
July 22, 2025, 3:15 pm
வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
July 22, 2025, 1:01 pm