
செய்திகள் உலகம்
17.5 மில்லியன் பயணிகள் சாங்கி நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்
சிங்கப்பூர்:
இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சுமார் 17.5 மில்லியன் பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட இது 5.9 விழுக்காடு அதிகம் என்று 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரம் காட்டுகிறது.
மேலும், இந்த எண்ணிக்கை கோவிட்-19 கிருமி தொற்றுக்கு முன் 2019-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட அது 4 விழுக்காடு அதிகமாகும்.
சாங்கி விமான நிலையக் குழுமம் இன்று அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
ஏப்ரலில் மட்டும் சாங்கி விமான நிலையத்தை 5.78 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர்.
மே மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 5.82 மில்லியனாகவும் ஜூன் மாதத்தில் அது 5.88 மில்லியனாகவும் பதிவானது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவிலிருந்தே அதிகமான பயணிகள் விமான நிலையத்தைக் கடந்தனர்.
இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் இடம்பெற்றுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm