செய்திகள் உலகம்
ஜூலை 23-ஆம் தேதி துவாஸ் 2-ஆவது இணைப்பைப் பயன்படுத்துவதை வாகனமோட்டிகள் தவிர்க்க வேண்டும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரிலிருந்து வாகனத்தில் மலேசியா செல்வோர் வரும் புதன்கிழமை, ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துவாஸ் இரண்டாம் இணைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
துவாஸ் இரண்டாம் இணைப்பில் அவசரச் சேவைப் பயிற்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம், மலேசியாவின் சுற்றுப்புறப் பிரிவு இரண்டும் மற்ற சில அமைப்புகளுடன் இணைந்து துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனக் கசிவுப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன.
பயிற்சி நடக்கும் போது மலேசியாவை நோக்கிய துவாஸ் இணைப்புப் பதையில் உள்ள மூன்று தடங்களும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிக்கையில் தெரிவித்தது.
பயிற்சி நடக்கும்போது வாகனங்கள், சிங்கப்பூரை நோக்கிய துவாஸ் இணைப்புப் பகுதியில் உள்ள தடங்களில் ஒன்றுக்கு மாற்றிவிடப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
