
செய்திகள் இந்தியா
கோடிகளில் கடன் வாங்கித் தருவதாக தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் ரோஹன் கைது
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரோஹன் சல்டானா (42). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தன்னை பெரிய கோடீஸ்வரராக காட்டிக்கொண்டுள்ளார்.
ரோஹன் சல்டானா பெங்களூரு, மங்களூரு, கோவா, மும்பை ஆகிய இடங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார்கள் குவிந்துள்ளன.
இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் மங்களூருவில் உள்ள ஜேபினமோகர் பகுதியில் விலை உயர்ந்த காரில் சென்ற ரோஹன் சல்டானாவை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரது பங்களாவுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மிகவும் ஆடம்பரமாக கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவில் விலை உயர்ந்த வாகனங்கள், ரகசிய அறைகள், ராசியான தாவரங்கள், ரூ.72 லட்சம் மதிப்புள்ள பழமையான வெளிநாட்டு மது வகைகள், விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், 667 கிராம் தங்க நகைகள், ரூ.2.76 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூ.300 கோடி வரை மோசடி: இதுகுறித்து மங்களூரு போலீஸாரிடம் விசாரித்த போது, “ரோஹன் சல்டானா அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரிய தொழிலதிபர். தனது ஆடம்பர வாழ்க்கையின் மூலம் பெரும் தொழிலதிபர்களுக்கு நண்பராக மாறிவிடுவார்.
பின்னர் தொழிலதிபர்களுக்கு ரூ.50 கோடி முதல் ரூ.1000 கோடி வரை குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக ஆசை காட்டி, ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கமிஷன் வாங்குவார்.
கமிஷன் தொகையை வாங்கிய உடன், அங்கிருந்து தலைமறைவாகி விடுவார். இந்த வகையில் இதுவரை சுமார் ரூ.300 கோடி வரை அவர் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm