நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷியா தவிர பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம்: அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கைக்கு இந்தியா பணிந்தது

புது டெல்லி: 

ரஷியாவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் கூடுதல் வரி விதித்தால்  பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யும் என்று ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்று நேட்டா நாடுகளின் தலைவர் எச்சரித்தார். அமெரிக்காவும் கடுமையாக எச்சரித்தது

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் புதிய நாடான கயானா உள்பட பிரேஸில், கனடா ஆகியவையும்  கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன.

ரஷியா விடமிருந்து மட்டும் கச்சா எண்ணெய்யை மட்டும் இந்தியா வாங்காது. இதனால் இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.

இந்தியாவிலும் புதிய எண்ணெய் படுகைகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 27 நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை  வாங்கி வருகிறது. மொத்தம் 40 நாடுகள் இப்போது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset